தேன்கனிக்கோட்டை, மார்ச் 12: தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளி கிராமத்தில் தேசிய வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள வங்கியின் மேலாளருக்கு தமிழ் எழுத, படிக்க தெரியாததால், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலாளருக்கு தமிழ் தெரியாததால் விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் கடனுதவி கேட்டு செல்லும் போது அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும், வங்கியில் குறைந்த அளவே பணியாளர்கள் உள்ளனர். இதனால் அடிக்கடி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே தகராறு ஏற்படுகிறது.