திருப்பூர், மார்ச்.3: திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், சாமளாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: சாமளாபுரம் கருப்பராயன் கோவில் வீதி 10-வது வார்டு ஏரி புறம்போக்கு நிலத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் 150-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள வீடுகளை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நீர்நிலை புறம்போக்கு குடியிருப்புகளை அகற்றுவதை, தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும்.