போச்சம்பள்ளி, பிப்.22:கிருஷ்ணகிரி கேஆர்பி உபரிநீர் நீடிப்பு இடதுபுற கால்வாய் பயன் பெறுவோர் சங்க தலைவர் சிவகுரு, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காவேரிப்பட்டணம் ஒன்றியம், மாரிச்செட்டிஅள்ளி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் பெற்றோர், தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.