ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் 186வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் நேற்று புழுதிவாக்கம் ராஜ ராஜேஸ்வரி நகர், கிருஷ்ணராஜ் நகர், அண்ணாமலை தெரு, பகத்சிங் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘‘தமிழக முதல்வரின் அனைத்து திட்டங்களையும் நமது வார்டுக்கு பெற்று தருவேன். பூங்காக்களை சீரமைப்பேன், இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மையம், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சமுதாய நலக்கூடம் அமைத்து தருவேன், சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்,’’ என்றார்.