திருச்சி, புதுகை மாவட்டங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

திருச்சி, பிப். 18: நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை 19ம் தேதி நடக்கிறது. இதனால் அன்றைய தினம் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தங்கராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் அன்றைய தினம் அனைத்து கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இதனை உறுதி செய்ய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறை தொடர்பான புகார்கள் இருந்தால் திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) வெ.தங்கராசு 9566904179, திருச்சி துணை ஆய்வர்கள் பழனியம்மாள்-9788992009, திவாகரன் 9698611336, புதுக்கோட்டை தொழிலாளர் துணை ஆய்வர் அர்வின்செல்வம் 9791474764, தொழிலாளர் உதவி ஆய்வர்கள் கார்த்திக் 6374751647, லட்சுமி - 8608283848, பாலசுப்பிரமணியன் 9865667355, தனலெட்சுமி 9445430573, அகஸ்டின் 9787789962, ரங்கம் மற்றும் லால்குடி தொழிலாளர் உதவி ஆய்வர் ராஜேந்திரன் 9443410452, புதுக்கோட்டை தொழிலாளர் உதவி ஆய்வர் குணசீலன் 9894574212, அறந்தாங்கி தொழிலாளர் உதவி ஆய்வர் நூருன்னிசா 9790460408 ஆகியோரின் எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தங்கராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருக்கிறார்.

Related Stories: