பவானி காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீரில் மூழ்கி முதியவர் சாவு

பவானி, பிப். 10:  பவானி காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீரில் மூழ்கிய முதியவர் உயிரிழந்தார்.காலிங்கராயன் வாய்க்காலில் அணைநாவிதம்பாளையம் அருகே நேற்று சுமார் 60 வயது மதிப்புள்ள முதியவர் குளிக்கச் சென்றார். தண்ணீர் அதிகளவில் சென்றதால் நீரில் மூழ்கிய அவர் அடித்துச் செல்லப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த படித்துறையில் குளித்தவர்கள் அவரை மீட்டனர்.இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முதியவரை சோதனை செய்ததில் அவர்  ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. முதியவரிடம் தாராபுரத்தில் இருந்து ஈரோடு வந்ததற்கான பஸ் டிக்கெட் இருந்துள்ளது. இவர் யார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: