போளூர், பிப்.9: திருமலை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவர்களின் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தமிழகத்தில் மஞ்சள் பை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், திருமலை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சார்பில் ‘மீண்டும் மஞ்சள் பை’ விழிப்புணர்வு நேற்று நடைபெற்றது. மாணவர்கள் நடத்திய ஊர்வலத்தில் ‘கையில் எடுப்போம் மஞ்சப்பை, கை விடுவோம் நெகிழிப்பையை’ என்ற தெருமுனை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.