தண்டராம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு

தண்டராம்பட்டு, பிப். 7: தண்டராம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். தண்டராம்பட்டு அடுத்த சே.ஆண்டாப்பாட்டு ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் வசிக்கும் ரவி விவசாயி. இவர் விவசாய கிணற்றில் நேற்று காலை தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்று பார்த்தார். அப்போது. கிணற்றில் மான் ஒன்று விழுந்து தத்தளித்து கொண்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் குப்பனுக்கு போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் தத்தளித்து கொண்டு இருந்த புள்ளி மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து காப்புக்காடு பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Related Stories: