திருச்சி சிறையில் உள்ள 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

திருச்சி, ஜன. 29: ரங்கம் காந்திநகரில் கடந்த மாதம் 6ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியதாக முத்து (எ) வீரபத்திரன், 9ம் தேதி வயலூர் ரோடு பாரதிநகரில் நடந்து சென்ற ஒருவரிடம் செல்போனை பறித்து சென்ற பார்த்திபன், திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தில் 27ம்தேதி நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி செல்போனை பறித்த நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்வதால் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடவேண்டும் என மாநகர கமிஷனருக்கு அந்தந்த கா காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

இன்ஸ்பெக்டர்களின் பரிந்துரைகளை ஏற்ற மாநகர கமிஷனர் கார்த்திகேயன், சிறையில் உள்ள 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை அடுத்து சிறையில் உள்ள 3 பேரிடமும் அந்தந்த காவல் நிலைய போலீசார் அதற்கான நகலை நேற்று தனித்தனியே வழங்கினர்.

Related Stories: