விருத்தாசலம், ஜன. 29: விருத்தாசலம் அருகே உள்ள பரவளூர் ஊராட்சியில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கான சுடுகாடு அமைந்துள்ளது. சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை தனி நபர் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். மயான பாதை கேட்டு போராடி வந்த நிலையில், அரசு அவர்களுக்கென மயான பாதை அமைத்து கொடுத்துள்ளது. ஆனால் அந்த பாதையை தனி நபர் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். ஏற்கனவே அளவீடு செய்யப்பட்ட இடத்தில் சுடுகாட்டு பாதை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பழங்குடி இருளர் பேரவை மாநில தலைவர் செல்வகுமார் தலைமையில் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.