கம்மாபுரம், ஜன. 29: கடலூர் மாவட்டத்தில் சம்பா பட்டத்தில், 2 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கம்மாபுரம், விருத்தாசலம் பகுதிகளில் பி.பி.டி., பொன்னி, கோ.ஆர்-50, கோ-43, பொன்மணி உள்ளிட்ட பல வகை நெல் ரகங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. டெல்டா அல்லாத பகுதிகளான கம்மாபுரம், விருத்தாசலம், வடலூர், கடலூர் பகுதிகளில் போர்வெல் பாசனத்தின் மூலம் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது, கம்மாபுரம் பகுதியில் நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. முன் பருவத்தில் பயிர் செய்த சில விவசாயிகள் அறுவடையை துவக்கி விட்டனர்.