திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லூர் அருகே மதுபோதையில் 5 பேர் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையத்தில் டாஸ்மாக் கடையில் நேற்று முன் தினம் இரவு மது அருந்திய ஆசாமி ஒருவர் அந்த பகுதியில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை பொதுமக்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, தொடர்ந்து அங்கிருந்து சென்று, தனது நண்பர்கள் 5 பேரை அழைத்து வந்து அந்த பகுதியை சேர்ந்த செல்வராம், மணிகண்டன், பாபு, சுந்தரம், காளிமுத்து ஆகிய 5 பேரை கத்தி மற்றும் கட்டைகளால் தாக்கிவிட்டு, தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த 5 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.