ஆத்தூர்: ஆத்தூர், மல்லியகரை அருகே கோபாலபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. விஷேச நாட்கள் மற்றும் இதர நாட்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை கோயிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்னே சென்று பார்த்த போது, உண்டியல் பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து பொதுமக்களுக்கு பூசாரி தகவல் தெரிவித்தார். திரண்டு வந்த மக்கள் இது குறித்து மல்லியக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.