திருவண்ணாமலை, ஜன.5: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர கால அவசாகம் நீட்டிக்கப்பட்டு வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இணை ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் தெரிவித்திருப்பதாவது: சாதி வேறுபாடு இல்லாமல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக உருவாக்குவதற்காக, பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில சைவ சமய மற்றும் வைணவ சமய பயிற்சி பள்ளிகள் தொடங்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது. அதில், 40 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.