முல்லையாற்றில் 2 சடலங்கள் மீட்பு

தேனி, ஜன. 3: தேனி அருகே, பாலார்பட்டியில் தோகை ஓடை ரோட்டையொட்டி முல்லையாறு செல்கிறது. இப்பகுதி ஆற்றில் சுமார் 45 வயதுள்ள ஆண் பிரேதம் மிதந்து கொண்டிருந்தது. இது குறித்து உப்பார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கீதா, வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் ஆற்றில் மிதந்த பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதேபோல, தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லையாற்று பாலம் அருகே, ஒரு தோட்டத்தை ஒட்டியுள்ள கரையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலமாக கிடந்தார். இது குறித்து அல்லிநகரம் கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் அளித்த புகரின்பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் உடலை மீட்டு தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: