அவிநாசி, ஜன.3: துருக்கியில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் 3 தங்கம் வென்றுசாதனை படைத்த அவிநாசியை சேர்ந்த கல்லூரி மாணவனுக்கு, அவிநாசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவிநாசி காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் வலுதூக்கும் வீரர், பயிற்சியாளர். இவரது மகன் பிரபு (23), கோவை தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். வலு தூக்கும் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர், தனது தந்தையிடம் பயிற்சி பெற்று, தொடர்ந்து 2016, 2017, 2019ல் பாரதியார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில், தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல், 2019ல், தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கப்பதக்கமும், 2019-2020ல் இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்றுள்ளார்.