ஆரணி, டிச.31: ஆரணி அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதி கொண்டதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஜலகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி(21). சென்னை ஒரகடம் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் தினமும் ஆரணிக்கு பைக்கில் வந்து, அங்கிருந்து கம்பெனி பஸ்சில் வேலைக்கு சென்று வருவார். வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு ஆரணி வந்து இரவு பைக்கில் வீடு திரும்பினார். ஆரணி- சந்தவாசல் சாலையில் பார்வதி நகர் அருகே சென்றபோது எதிரே குன்றுமேடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாஸ்கர்(28), ராமநாதபுரம் மேலாண்டபுரத்தை சேர்ந்த சங்கர்(38) ஆகியோர் வந்த பைக்கும், கார்த்தியின் பைக்கும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.