வேதாரண்யம், டிச.28: கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் 24 சது கிலோமீட்டர் பரப்பளவில் வனவிலங்கு சரணலாயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் மான், நரி, குரங்கு, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வனவிலங்குகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீரும், உணவும் கிடைக்கிறது. தற்போது இங்குள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளி மான்கள், வெளிமான்கள் நன்றாக செழிப்புடன் உள்ளன.