தேவகோட்டை, டிச.28: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி நிறுவனர் வள்ளல் அண்ணாமலை செட்டியாரின் 98வது பிறந்தநாள் மற்றும் கல்லூரியின் பொன்விழா நேற்று நடைபெற்றது. தேவகோட்டை ஜமீன்தார் சோம.நாராயணன் செட்டியார் தலைமை ஏற்றார். கல்லூரி செயலர் சாந்தி ஆச்சி, கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெயம் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். செட்டிநாடு குழும மேலாண் இயக்குனர் முத்தையா என்ற ஐயப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் பொன்விழா மலரை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார்.