குன்னத்தூரில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

திருமங்கலம், டிச. 25: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருமங்கலம் அடுத்த குன்னத்தூரிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் எம்எல்ஏ அய்யப்பன், முன்னாள் எம்எல்ஏ நீதிபதி, திருமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், அணி அமைப்பாளர்கள் தமிழழகன், தமிழ்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

*அலங்காநல்லூர் அருகே கோவிலூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மேற்கு ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், கிளை நிர்வாகிகள் நடராஜன், ஜெகதீஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபு, ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: