அமைச்சர் துவக்கி வைத்தார் சுந்தம்பட்டி ஊராட்சியில் 60 கி.வாட் புதிய மின்மாற்றி

கந்தர்வகோட்டை, டிச.25: ந்தம்பட்டி ஊராட்சியில் 63 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். கந்தர்வகோட்டை பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கவிதாராமு தலைமை வகித்தார். சுந்தம்பட்டி ஊராட்சியில் 63 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை அமைச்சர் தொடங்கி வைத்தார். வெள்ளாளவிடுதி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தையும், மருங்கூரணி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், ஒன்றியகுழு தலைவர் கார்த்திக் (எ) ரத்தினவேல், வெள்ளாளவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், தாசில்தார் புவியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், திலகவதி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: