திருமங்கலம், டிச. 24: திருமங்கலம் அருகேயுள்ள மேலஉரப்பனூர் கண்மாய் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிரம்பியது. தொடர்ந்து வைகையாற்றிலிருந்து தண்ணீர் வருவதால் கண்மாய் தண்ணீர் மற்ற கண்மாய்களுக்கு செல்கிறது. இந்நிலையில் நேற்று காலை கண்மாயின் மூன்றாம் மடை பகுதியில் தண்ணீர் திறக்க முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மடையின் ஷெட்டர் பகுதியில் உடைப்பு ஏற்படவே கண்மாய் தண்ணீர் அருகேயுள்ள நெல் வயல்களில் பாய்ந்தது. மடையில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய விவசாயிகள், பொதுமக்கள் முயன்றனர்.