சத்தியமங்கலம், டிச.24: திம்பம் மலைப்பாதை வளைவில் கண்டெய்னர் லாரி பழுதானதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி திம்பம் மலைப்பாதை 9 வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது பழுதாகி நகர முடியாமல் நின்றது.