திருப்பூர், டிச. 22: திருப்பூர் மாநகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாநகரில் டெங்கு பாதிப்பு இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.