புதுக்கோட்டை, டிச. 21: நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் மற்றும் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகத்திற்கு கேடயத்தையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதா ராமு நேற்று வழங்கினார். பின்னர் அவர் தெரிவித்ததாவது;
நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்றன. இந்த பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு காசோலையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.