விக்கிரமங்கலம் அருகே கூலி தொழிலாளி தற்கொலை

தா.பழூர்,டிச.21: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செங்குழி கீழத் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (35). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட இவரது மனைவி சீதா, மோகன் ராஜை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சாமிதுரை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: