சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை 5 கி.மீட்டரில் இருந்து 3 கி.மீட்டராக குறைக்கும் முடிவு கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சரணாலயத்தைக் காக்கும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதினேன். அந்த முயற்சிகளுக்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.