உளுந்தூர்பேட்டை அருகே கல்லூரி மாணவி கடத்தல் 6 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை,  டிச. 17:உளுந்தூர்பேட்டை  அருகே களமருதூர்  கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய பெண் புதுச்சேரியில் உள்ள ஒரு  கல்லூரியில் பிஎட் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அயன்வேலூர்  கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருப்பதாக செல்போன் மூலம்  தெரிவித்துள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து  திருநாவலூர் காவல்நிலையத்தில் மாணவியின் தாய் கொடுத்துள்ள புகாரின் தனது  மகளை சரத், தமிழ்செல்வி, சூர்யா, அருண்குமார், சசி, பிரகாஷ் உள்ளிட்ட 6  பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று இருக்கலாம் என தெரிவித்ததை அடுத்து  இன்ஸ்பெக்டர் சீனுவாசன் வழக்கு பதிந்து தேடி வருகிறார்.

Related Stories: