திருப்பூர், டிச. 14: திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் சிலர் டெங்கு பரிசோதனை செய்யும்போது அவர்களுக்கு டெங்கு காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை என பலரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.மாவட்டத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருப்பூர் மாநகர பகுதியில் மட்டும் 120க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.