உதயநிதி பிறந்த நாள் விழாவில் நலஉதவி

ஓசூர், டிச.13: ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 31வது வார்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக கொடி ஏற்றியும், மாநகராட்சியில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ சத்யா தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் வரவேற்றார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு திமுக கொடியேற்றி வைத்து முன்கள பணியாளர்களுக்கு மழை கோட் மற்றும் இனிப்புகளை வழங்கினார். விழாவில் மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட துணை செயலாளர்கள் ஸ்ரீனிவாசன், தனலட்சுமி, முன்னாள் நகரமன்ற தலைவர்கள் குருசாமி, மாதேஸ்வரன், முன்னாள் நகர செயலாளர்கள் அக்ரோ நாகராஜ், நடேசன், மாநகர துணை செயலாளர்கள் நாகராஜ், திம்மராஜ், மாநகர பொருளாளர் சென்னீரப்பா, மாநகர அவைத்தலைவர் கருணாநிதி, அணிகளின் அமைப்பாளர்கள் சீனிவாசன், மாணவரணி ராஜா, தொண்டரணி முல்லைசேகர், இலக்கிய அணி எல்லோரா மணி, கோபி, மகேஷ்பாபு, ராமு, முருகேசன் ரவி, சுமன், மத்திகிரி ரவிக்குமார், மகளிரணி முனிரத்னா, தனலட்சுமி மற்றும் வார்டு செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: