ராஜபாளையம், டிச. 13: ராஜபாளையம் நகரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், மாற்றுப்பாதையாக மலையடிப்பட்டி சாலை உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பீமராஜா சாலை வழியாக, தற்காலிகமாக குறுக்குவழிச் சாலையான கணதியாபுரம் தெரு ரயில்வே அடிப்பாலம் வழியாக சத்திரப்பட்டி சாலை சென்று வந்தனர். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, இந்த பாதை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் உட்பட அனைத்து தரப்பட்ட மக்களும், அச்சாலையில் பயணிக்க பெரிதும் சிரமப்படுகின்றனர்.