ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

வள்ளியூர், டிச. 10:  வள்ளியூர் அருகே உள்ள சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘‘சட்டத்தின் ஒளியில் சமூக நீதி’’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக லெய்டி மைய இயக்குநர் மரியஅரசு கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன், பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள், இளைஞர் செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் செய்திருந்தனர்.

Related Stories: