கரூர், டிச. 10: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவரை கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்து மற்றொருவரை தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள ரெங்கநாதன்பேட்டையை சேர்ந்தவர் கீர்த்தி என்கிற சரண்ராஜ்(32). லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை காட்டுப்பிள்ளையார் கோயில் அருகே, உறவினர் ராஜா என்பவருடன் மது அருந்திக் கொண்டிருந்தனர். நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்த பாலன், பாபு ஆகிய இருவரும் இவர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது சரண்ராஜூவுக்கும், பாலன், பாபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.