புகையிலை பொருட்கள் விற்ற மளிகைக் கடைக்காரர் கைது

பந்தலூர், டிச. 9 : பந்தலூர் அருகே பிதர்காடு பஜாரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைனை தொடர்ந்து அம்பலமூலா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் அங்கு சென்று கடைகளில் சோதனை செய்து 1 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கடை உரிமையாளர் சுந்தரம் (53) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: