சாக்கடைக்குள் தவறி விழுந்த வாலிபர் சாவு

ஈரோடு, டிச. 6: ஈரோடு திருநகர் காலனி பகுதியில் நேற்று காலை சாக்கடைக்குள் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார், இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர், கருங்கல்பாளையம் பச்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான பாண்டியன் மகன் ராஜா(26) என்பதும், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு சாக்கடை திட்டில் உட்கார்ந்திருந்தபோது, தவறி விழுந்து சாக்கடைக்குள் இருந்த தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: