முத்துப்பேட்டை அருகே விபத்து பைக் மோதி கூலித்தொழிலாளி பலி

முத்துப்பேட்டை,டிச.6: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு எம்கே நகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி(60). கூலித்தொழிலாளி. இவர் தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தார். நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு பைப் மூலம் குடத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டு சாலையை கடந்த போது முத்துப்பேட்டையை நோக்கி சென்ற ஒரு பைக் மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட பக்கிரிசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு காது வழியாக ரத்தம் வெளியேறியது. உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பக்கிரிசாமி இறந்தார். இது குறித்து அவரது மனைவி செல்லமணி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எஸ்ஐ குணசேகரன் மற்றும் போலீசார், இறந்த பக்கிரிசாமியின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பைக்கை ஓட்டி வந்த நாகப்பட்டினம் அம்பிகா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேசை(21) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: