14ல் தபால்துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

ஊட்டி, டிச. 5: நீலகிரி கோட்ட அளவிலான தபால் துறை ஓய்வூதியர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 14ம் தேதி காலை 10 மணியளவில் ஊட்டியில் உள்ள நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தபால் துறை ஓய்வூதியர்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் கடிதம் மூலமாக அஞ்சலக கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், ஊட்டி 643001 என்ற முகவரிக்கு வரும் 9ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று  நீலகிரி கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் ராகவேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: