ஆரணி, ஏப்.20: ஆரணியில் 100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள இரும்பேடு, சக்திநகர், ராந்தம்கொரட்டூர், புதுப்பட்டு, நெசல், சிறுமூர், மாமண்ட்டூர், காட்டுகாநல்லூர், புதுப்பாளையம், அய்யம்பாளையம், ஆகாரம், தச்சூர் ஆகிய கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மகாத்மாகாந்தி தேதிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை முழுமையாக வழங்கக்கோரி பிடிஓ அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதனால் மாற்றுத்திறனாளிகள் மீண்டும் வேலை வழங்கக்கோரி மனு அளிக்க பிடிஓ அலுவலகத்திற்கு நேற்று சென்றிருந்தனர். அப்போது, பிடிஓ அலுவலக பணி சம்பந்தமாக வெளியில் சென்றிருந்தார். இதனால் மனுக்களை பிடிஓ அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர். அப்போது அதிகாரிகள் மனுக்களை வாங்கமறுத்ததால், மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நேற்று திடீரென பிடிஓ அலுவலகத்ததை முற்றுகையிட்டனர். அப்போது, 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 100 நாள்களுக்கு வழங்க வேண்டிய வேலையை 40 நாட்கள் வழங்குவதை, முழுவேலை வழங்க வேண்டும்.