திருப்பூர், ஏப். 19: திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்டக் கழக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் கருத்துரையாற்றினார். இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.