திண்டுக்கல், ஏப். 16: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து தெருக்கள் மூடப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திண்டுக்கல் நாகல்நகர், முனியப்பன் கோயில் சந்து, ரவுண்ட் ரோடு நாராயணதாஸ் நகர், ராஜீவ்காந்தி நகர் ஆகிய இடங்களில் மாநகராட்சி சார்பாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைத்துள்ளனர். மேலும் அந்த பகுதியை சுற்றி மாநகராட்சி சார்பாக மாநகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொண்ட குழுவினர் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்துகின்றனர்.