கூலித்தொழிலாளி தற்கொலை

ஆவடி, ஏப். 15: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அன்னை அஞ்சுகம் நகர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விஜி (23). கட்டிட தொழிலாளி. இவரது அண்ணன் சர்வணன் என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சரவணன், வேலைக்கு சென்று விட்டார். விஜி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இரவு வேலை முடிந்து சரவணன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கூரையில் விஜி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின்படி திருமுல்லைவாயில் போலீசார்,   வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: