கும்பகோணம்,ஏப்.14: கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. வருகின்ற 21ம் தேதி நடைபெறவிருந்த தேரோட்டம் கொரோனா தொற்று பரவலின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் மூலவர் மற்றும் உற்சவர் ராமபிரான் பட்டாபிஷேக மூர்த்தியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோயிலில் ராமநவமி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டு கொரோனா பரவல் ஊரடங்கு காலத்தை முன்னிட்டு ராமநவமி விழாவை எளிய முறையில் நடத்திட கோயில் நிர்வாகம் முன் வந்தது.