பெரம்பலூர், ஏப். 14: பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மங்களமேட்டை சேர்ந்த ராஜபூபதி என்பவரை பார்ப்பதற்காக, அவருடைய உறவினர் மங்களமேடு, இந்திரா நகரை சேர்ந்த கருணாநிதி மகன் மணிகண்டன் என்பவர் நேற்று முன்தினம் இரவு வந்தார். அப்போது, அவரது ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போனது. இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் 2 பேர் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை பிடித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.