மாடிப்படியில் இருந்து விழுந்து குழந்தை பலி

கிருஷ்ணகிரி, ஏப்.14: கிருஷ்ணகிரி அருகே மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி பாரீஸ் நகர் முனியப்பன் கோயில் அருகே, வசித்து வருபவர் ஜோசப் ஆனந்தராஜ். ஆட்டோ டிரைவர். இவரது மகள் யாழினி (3). நேற்று முன்தினம் குழந்தை யாழினி மாடிப்படிக்கட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தது.இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை யாழினி பரிதாபமாக இறந்தது. இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் எஸ்.ஐ சிவசந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: