ஓசூர், ஏப்.14: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கவுரம்மா. இவரது மகன் ராஜ்குமார் (29). குடி போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து, சக்திவேல் மீது மோதினார். இதனால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், அவரது சகோதரர்கள் மதன் (24), சக்கரவர்த்தி (26) மற்றும் தாயார் கவுரம்மா உள்ளிட்டோர், சக்திவேல், அவரது மனைவி ரூபா, மற்றும் சக்திவேலின் தந்தை மணி (60), தாய் சாந்தம்மா (55) ஆகியோரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் ரூபா, சாந்தம்மா, மணி, சக்திவேல் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்து ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.