திருப்பூர் ரயில்வே ஸ்ேடஷனில் கொரோனா தடுப்பு விதிமீறல்

திருப்பூர், ஏப்.13: குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே முன் பதிவு வசதியுடன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்கு வரும் பயணிகள் கட்டாயம் காய்ச்சல் அளவு கண்டறியப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வெப்ப நிலை கண்டறியும் கருவி பொருத்திய கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை முழுமையாக கண்காணிக்கும் வகையில் ஊழியர்கள் பணியமர்த்தப்படவில்லை. இதனால், பயணிகள் எவ்வித கட்டுப்பாடும், கண்காணிப்பும் இன்றி சென்று வருகின்றனர். சமூக இடைவெளி என்பது மாயமாகியுள்ளது.

Related Stories: