திருப்பூர்,ஏப்.12: திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டிற்கு குறைந்த அளவில் மீன்கள் விற்பனைக்கு வந்திருந்ததால் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு திருப்பூர், மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான மீன்கள் வாங்கி செல்வார்கள். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் மீனவர் கடல், மற்றும் அணைகட்டுகளில் மீன் பிடிக்க செல்வது வெகுவாக குறைந்துள்ளது.