தஞ்சை,ஏப்.12: விவசாய உரங்களின் விலை உயர்வை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) அறிவித்துள்ளது
இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உரம் மற்றும் இடு பொருட்களுக்கான விலை தொடர்பான அனைத்து அதிகாரத்தையும் தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்க வேண்டும். இதுவரை இருந்து வந்த நடைமுறைக்கு மாறாக தற்போது உர விலையை உற்பத்தி நிறுவனங்களே எந்த கட்டுப்பாடுமின்றி விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என்ற முடிவின் தொடர்ச்சியாக, தற்போது 60 சதவீத விலை உயர்வு விவசாயிகளை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.