மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே ஈசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் நெல் பயிர் செய்துள்ளனர். தற்போது, அவை அறுவடை செய்யப்படுகின்றன. இதனால், அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய ஈசூர் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அதற்கு, அரசு அதிகாரிகள், அப்பகுதியில் விரைவில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க உள்ளது என தெரிவித்தனர். மேலும், வரிசைப்படி விவசாயிகள் தங்களது நெல்லை, கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவர டோக்கன்கள் வழங்கினர். இதனால, அப்பகுதி நெல் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்யவில்லை என கூறப்படுகிறது. கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.