ஜெயங்கொண்டம், ஏப்.9: அரியலூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் நடைபெற்ற முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜெயங்கொண்டம் அருகே விருத்தாசலம் சாலையில் மகிமைபுரத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது முகக்கவசம் அணியாத 16 நபர்களுக்கு ரூ. 3200, சமூக இடைவெளி கடைபிடிக்காத 2 கடைக்கு ரூ.1000 என மொத்தம் ரூ4,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.